உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்புதியவை

மன்னாரில் இரண்டு இளைஞர்கள் காவல்துறையிடம் கையளிக்கப்பட்டனர்

மன்னார் பள்ளிமுனை கிராமத்தில் நேற்று திங்கட்கிழமை இரவு சந்தேகத்திற்கு இடமான முறையில் நடமாடிய வேறு மாவட்டத்தைச் சேர்ந்த இரண்டு முஸ்ஸீம் இளைஞர்கள் காவல்துறையினரிடம் கையளி;க்கப்பட்டனர்.

நாட்டில் இடம்பெற்ற குண்டு வெடிப்புச் சம்பவங்களைத் தொடர்ந்து தமிழ் மக்களின் கிராமங்களில் அச்ச நிலை ஏற்பட்டிருந்தது.

இதனையடுத்து கிராம மக்களும் விழிர்ப்புணர்வு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று திங்கட்கிழமை இரவு 11.30 மணியளவில் இரண்டு இளைஞர்கள் பள்ளிமுனை கிராமத்தில் சந்தேகத்திற்கு இடமான முறையில் நடமாடியுள்ளனர்.

இவர்கள் மீது சந்தேகம் கொண்ட பள்ளிமுனை கிராமத்தைச் சேர்ந்தவர்கள் அவர்களை நிறுத்தி விசாரித்தபோது முரண்பட்ட தகவல்களை கூறியுள்ளனர்.

இதனையடு;த்தே அவர்கள் காவல்துறையில் கையளிக்கப்பட்டனர்.

இருவரும் கற்பிட்டி மற்றும் கொழும்பு பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்று தெரிய வந்துள்ளது

கருத்து தெரிவிக்க