உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்சிறப்பு செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

சங்ரிலா விருந்தக தற்கொலைதாரிகளில் ஒருவர் ஸஹ்ரான் ஹாசிம்

கொழும்பு, சங்ரிலா விருந்தகத்தில் தாக்குதல் நடத்திய இரண்டு குண்டுதாரிகளில் ஒருவர் தேசிய தௌஹீத் ஜமாவின் தலைவர் ஸஹ்ரான் ஹாசிம் என்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

அரச பகுப்பாய்வுத் திணைக்களம் மரபணு பரிசோதனையின் அடிப்படையில் இது உறுதிசெய்யப்பட்டுள்ளது.

ஸஹ்ரானின் மனைவி மற்றும் அவரின் மகள், சகோதரி ஆகியோரின் இரத்த மாதிரிகளை பரிசோதனை செய்தபோதே இது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தநிலையில் இது தொடர்பான அறிக்கை, குற்றப்புலனாய்வுத் திணைக்களத்துக்கு சமர்ப்பிக்கப்படவுள்ளது.

இந்த அறிக்கையின்படி சங்ரிலா விருந்தகத்தில் ஸஹ்ரானும் இல்ஹாம் மொஹமட் இப்ராஹிமும் தற்கொலை தாக்குதலை நடத்தியுள்ளனர்.

கருத்து தெரிவிக்க