இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்சிறப்பு செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

மேர்வின் சில்வாவின் விளக்கமறியல் நீடிப்பு

கிரிபத்கொட பகுதியிலுள்ள அரசாங்க நிலத்தை போலி பத்திரங்களைப் பயன்படுத்தி விற்பனை செய்த குற்றச்சாட்டில் கடந்த மார்ச் 05ம் திகதி குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்ததற்கிணங்க இன்று (மார்ச் 17) நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டிருந்தார்.

இந்நிலையில் முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வாவை எதிர்வரும் மார்ச் 24ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மஹர நீதவான் உத்தரவிட்டுள்ளாரென தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

கருத்து தெரிவிக்க