உள்நாட்டு செய்திகள்புதியவைவடக்கு செய்திகள்வணிக செய்திகள்

மன்னாரில் தூய அடைக்கல அன்னையின் புதிய ஆலயம்

மன்னார் மறை மாவட்டம் அளவக்கை பங்கின் மாவிலங்கேணி கிராமத்தின் பாது காவலியாம் தூய அடைக்கல அன்னையின் புதிய ஆலயம் நேற்று திங்கட்கிழமை (20) மாலை திறந்து வைக்கப்பட்டுள்ளது.

மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு எப்.எல்.இம்மனுவல் பெர்னான்டோ ஆண்டகையினால் அபிசேகம் செய்யப்பட்டு ஆலயம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இதன் போது மறைமாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை அன்ரனி விக்டர் சோசை அடிகளார்,அருட்தந்தையர்கள்,பங்கு மக்கள் என பலர் கலந்து கொண்டனர்

கருத்து தெரிவிக்க