உள்நாட்டு செய்திகள்புதியவைவடக்கு செய்திகள்

மயூர குருக்களின் நூல் வெளியீடு

மயூர குருக்கள் எழுதிய “ஜென்மத்தின் தோஷமும் கால நிவர்த்தியும்”, பண்பாட்டில் ஆலயங்களும் நடைமுறைகளும் என்ற இரண்டு நூல்கள் வெளியிடப்பட்டுள்ளன.


வவுனியா நகர மண்டபத்தில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் சர்வதேச இந்து குருமார்கள் ஒன்றியத்தின் தலைவர் பண்டிதர் சிவஸ்ரீ கு.ஜெகதீஸ்வர குருக்களினால் நூல்கள் வெளியிட்டு வைக்கப்பட்டன

முதல் பிரதியை வைத்தியர் முத்துலிங்கம் பெற்றுக்கொண்டார்


நூலுக்கான நயவுரையினை வவுனியா பிரதேச கலாசார உத்தியோகத்தர் பண்டிதர் பிரதீபன் நிகழ்த்தினார்.

தமிழருவி சிவகுமாரன் தலைமையில் இடம்பெற்ற இந்தநிகழ்வில் வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் பரந்தாமன், உதவி பிரதேச செயலாளர் தர்மேந்திரா, வைத்தியர் மதுரகன், வவுனியா அந்தனர் ஒன்றிய தலைவர் குகனாத குருக்கள், மற்றும் ஆச்சாரியர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

கருத்து தெரிவிக்க