உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்

அம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு பாதுகாப்பை கோருகிறது சீனா – டில்லியும் களத்தில்

இலங்கையில்  முன்னெடுக்கப்பட்டுவரும் அபிவிருத்தித் திட்டங்கள் மற்றும் நிலைகளுக்கான பாதுகாப்பை பலப்படுத்துமாறு இலங்கையிடம், சீனா, இந்தியா ஆகிய நாடுகள் கோரிக்கை விடுத்துள்ளன.

அம்பாந்தோட்டை துறைமுகம், கொழும்பு துறைமுக நகரம், ஈஸ்டர் ஞாயிறன்று குண்டுத் தாக்குதலுக்கு இலக்காகிய ஷங்ரி-லா விடுதி ஆகியவற்றின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு சீன அரசாங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

அதேபோன்று இலங்கையில்  முன்னெடுக்கின்ற திட்டங்களுக்கும் பாதுகாப்பு வழங்குமாறு இந்திய அரசாங்கமும்  கோரிக்கை முன்வைத்துள்ளது.

இதற்கிடையில் கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகமும், உள்நாட்டு பாதுகாப்புத் துறையில் நிபுணத்துவம் வாய்ந்த இரண்டு மூத்த அதிகாரிகளைப் பணியில் அமர்த்தவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கருத்து தெரிவிக்க