உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்சிறப்பு செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

மினுவாங்கொட வன்முறை: பிரசன்னமாகாத மதுமாதவ

மினுவாங்கொடயில் கடந்த 13ஆம் திகதி, முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட வன்முறை சம்பவங்களுடன் தொடர்புடையவராக சந்தேகிக்கப்படும் பிவிதுரு ஹெல உறுமயவின் பிரதித் தலைவர் மதுமாதவ அரவிந்த காவல்துறை நிலையத்துக்கு செல்வதை தவிர்த்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் விசாரணைக்காக வருமாறு அவருக்கு காவல்துறையினர் அறிவித்தல் அனுப்பியுள்ளனர்.

எனினும் அவர் நேற்றும் இன்றும் காவல்துறை நிலையத்துக்கு சமுகம் தரவில்லை.

தாம் காவல்துறைக்கு செல்வதாக ஊடகங்களிடம் கூறிவிட்டுச் சென்றபோதும் அவர் அங்கு உரியநேரத்துக்கு சமுகமளிக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று முற்பகல் 10மணிக்கு அவரை காவல்துறைக்கு வருமாறு கோரப்பட்டது.

எனினும் அவர் பிற்பகல் 2.30க்கே அங்கு சென்றுள்ளார்.

இதன்போது அவரை விசாரணை செய்யவிருந்த காவல்துறை அதிகாரி வேறு ஒரு நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மினுவாங்கொட வன்முறை தொடர்பில் அரசியல்வாதி ஒருவர் கைதுசெய்யப்படவுள்ளதாக
ஏற்கனவே காவல்துறையினர் தெரிவித்து வருகின்றமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

கருத்து தெரிவிக்க