இலங்கை

பொதுத்தேர்தல் தொடர்பில் உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

ஜுன் 20ம் திகதி பொதுத்தேர்தலை நடாத்துவதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட சகல மனுக்களையும் உயர் நீதிமன்றம் இன்று அதிரடியாக தள்ளுபடி செய்யதுள்ளது. இம்மாதம் 20ம் திகதி பொதுத்தேர்தலை நடாத்துவதை எதிர்த்தும் பாராளுமன்றத்தை கலைக்கும் வகையில் ஜனாதிபதி விடுத்த வர்த்தமானியையும் செல்லுபடியற்றதாக்க கோரி தாக்கல் செய்யப்பட்ட எட்டு அடிப்படை உரிமைகள் மனுக்களையும் கடந்த நாட்களாக பரிசீலனை செய்து நேற்றைய தினம் நிறைவுக்கு வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது. அந்த அடிப்படையிலேயே இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க