சினிமா

கேரளா: திரைப்படப் படப்பிடிப்புகளுக்கு அனுமதி!

கேரளத்தில் திரைப்படப் படப்பிடிப்புகளை மீண்டும் தொடங்க மாநில அரசு அனுமதி அளித்துள்ளது.

கரோனா நோய்த்தொற்று பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக, தேசிய அளவிலான ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. கரோனா அச்சுறுத்தல் காரணமாக திரைப்படப் படப்பிடிப்புகள் அனைத்தும் தமிழ்நாட்டில் தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளன. திரைப்படப் படப்பிடிப்புக்குப் பிந்தைய போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகளுக்கு மட்டும் நிபந்தனையுடன் கூடிய அனுமதியை தமிழக அரசு அளித்துள்ளது. மேலும், தமிழகத்தில் 60 நபர்களைக் கொண்டு சின்னத்திரைப் படப்பிடிப்புகளை நடத்திக் கொள்ள முதல்வார் எடப்பாடி கே.பழனிசாமி அனுமதித்துள்ளார்.

எனினும் உரிய பாதுகாப்பு வழிமுறைகளுடன் திரைப்படப் படப்பிடிப்பைத் தொடங்க அனுமதி அளிக்க வேண்டும் என தமிழக முதல்வருக்குத் திரையுலகினர் கோரிக்கை வைத்துள்ளார்கள்.
இந்நிலையில் கேரளத்தில் திரைப்படப் படப்பிடிப்புகளை மீண்டும் தொடங்க மானில அரசு அனுமதி அளித்துள்ளது. 50 நபர்களைக் கொண்டு தகுந்த பாதுகாப்பு வழிமுறைகளுடன் உள் அரங்கில் படப்பிடிப்பை நடத்திக்கொள்ளலாம் என கேரள அரசு அனுமதி அளித்துள்ளது.

கருத்து தெரிவிக்க