இந்தியா

தமிழகத்தில் ஒரு சில இடங்களில் இன்று இடியுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்பு!

தமிழகத்தில் ஒரு சில இடங்களில் இன்று இடியுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதையடுத்து, அம்மாநிலத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய இந்திய வானிலை ஆய்வு மைய தென் மண்டலத் தலைவர் பாலச்சந்திரன், அரபிக் கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம், தொடர்ந்து புயலாக வலுபெற்று நாளை மாலை வடக்கு மஹாராஷ்டிரா மற்றும் தெற்கு குஜராத் பகுதிகளில் கரையைக் கடக்கும் என எதிர்ப்பார்க்கப்படுவதாகத் தெரிவித்தார்.
வெப்பச்சலனம் காரணமாக கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல், சேலம், பிரம்பலூர் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் பாலச்சந்திரன் தெரிவித்தார்.

கருத்து தெரிவிக்க