உள்நாட்டு செய்திகள்சிறப்பு செய்திகள்புதியவைவடக்கு செய்திகள்

வற்றாப்பளை கண்ணகி அம்மன்: வருடாந்த வைகாசி விசாக பொங்கல்

முல்லைத்தீவு மாவட்டத்தின் வரலாற்றுச்  சிறப்பு மிக்க வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த வைகாசி  விசாகப்பொங்கல்  உற்சவம் இன்று மிக சிறப்பாக இடம்பெற்று வருகின்றது

காவல்துறையினர் இராணுவத்தினர் கடற்படை விமானப் படை உள்ளிட்டமுப்படையினரின் உயரிய பாதுகாப்புக்கு மத்தியில் ஆலய உற்சவம் இன்று மிகச்சிறப்பாக இடம்பெற்று வருகின்றது

இன்று அதிகாலை  3மணிக்கு முள்ளியவளை காட்டு விநாயகர் ஆலயத்திலிருந்து மட பண்டம் எடுத்துவரப்பட்டு ஆலய உற்சவம் இனிதே ஆரம்பமாகியது

அதனைத் தொடர்ந்து அடியவர்களுக்கு அர்ச்சனை இடம்பெற்று வருகின்றது

குறிப்பாக காலைவேளை முதல் அடியவர்கள் பால்செம்பு, காவடி, அங்கப்பிரதட்சை, உள்ளிட்ட பல்வேறு நேர்த்திக்கடன்களை அரோகரா கோஷம் முழங்க நிறைவேற்றி வருவதை காணக்கூடியதாக இருக்கின்றது

பல்லாயிரக்கணக்கான அடியவர்கள்  கலந்துகொள்கின்ற  இந்த ஆலயத்தில் இன்று இரவு வளர்ந்து  நேந்து பொங்கல் இடம்பெறுகின்றமை விசேட அம்சமாகும்

 

கருத்து தெரிவிக்க