உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்புதியவை

பாடசாலைகளுக்கு பிள்ளைகளை அனுப்புங்கள்-இராணுவத்தளபதி

நாட்டின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

எனவே பெற்றோர் தமது பிள்ளைகளை நாளை முதல் பாடசாலைகளுக்கு அனுப்புமாறு இராணுவத்தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மஹேஸ் சேனாநாயக்க கோரியுள்ளார்.

பாடசாலைகள் இரண்டாம் தவணைக்காக திறக்கப்பட்டுள்ள நிலையில் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

பெற்றோரில் பெரும்பாலானோர் வதந்திகள் காரணமாக தமது பிள்ளைகளை பாடசாலைகளுக்கு அனுப்பாமல் உள்ளனர்.

எனினும் பாடசாலைகளுக்கு பாதுகாப்பு என்பதற்கு முப்படையினரும் முன்னுரிமை வழங்குவர் என்று இராணுவத்தளபதி குறிப்பிட்டுள்ளார்.

கருத்து தெரிவிக்க