சிறப்பு செய்திகள்புதியவைவெளிநாட்டு செய்திகள்

பாரசீக வளைக்குடாப் பகுதியில் பதற்றம் தொடர்கிறது.

பாரசீக வளைக்குடா பதற்றச் சூழ்நிலை அதிகரித்துவருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அமரிக்காவின் வானூர்தி தாங்கிக் கப்பலான ஏபிரஹாம் லிங்கன் கடந்த 15ஆம் திகதி அரபுக்கடல் நோக்கிப் புறப்பட்டது.

இந்தநிலையில் மே 13ஆம் திகதி ஹர்மஸ் கடற்பகுதியில் உள்ள கப்பல்களுக்கு எரிபொருள் நிரப்பும் மையத்தில் தரித்திருந்த கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.

இந்த தாக்குதலுக்கு யார் பொறுப்பு என்பது இதுவரை தெரியவில்லை.

இதற்கு தீவிரவாதிகள் காரணமாக இருப்பார்களா? என்ற சந்தேகம் எழுப்பப்பட்டுள்ளது.

எனினும் அமரிக்கா, ஈரானை குற்றம் சுமத்தியுள்ளது.

கருத்து தெரிவிக்க