உள்நாட்டு செய்திகள்சிறப்பு செய்திகள்புதியவைவடக்கு செய்திகள்

பாதுகாப்புக்கு மத்தியில் இன்று வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய பொங்கல்

முல்லைத்தீவு மாவட்டத்தின் வரலாற்று சிறப்புமிக்க வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த வைகாசி விசாகப் பொங்கல் உற்சவம் இன்று இடம்பெறுகிறது

இந்தநிலையில் சுமார் ஆயிரம் வரையான காவல்துறையினர் பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டுள்ளனர்.

இராணுவத்தினரும் ஆலயத்துக்கு உள்நுழையக்கூடிய அனைத்து பாதைகளிலும் வீதித் தடைகளை ஏற்படுத்தி சோதனைகளை தீவிரப்படுத்தியுள்ளனர்.

ஆலய வளாகத்தை சூழவும் இராணுவத்தினர் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்;

.
பொங்கல் உற்சவத்துக்காக பல லட்சம் அடியார்கள் வரை வருகைத்தருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது

இதேவேளை முள்ளியவளை காட்டுவிநாயகர் ஆலய வருடாந்த வைகாசி விசாக பொங்கல் நேற்று  இடம்பெற்றது.

ஆலய உற்சவத்தில் நேற்று இரவு வளர்ந்து நேர்ந்து பொங்கல் இடம்பெற்றதுடன் இன்று அதிகாலை வரலாற்று சிறப்புமிக்க வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தின் வருடாந்த பொங்கல் உற்சவத்துக்கான பண்டம் இந்த ஆலயத்திலிருந்து எடுத்து செல்லப்பட்டது

கருத்து தெரிவிக்க