உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தினால் வரி செலுத்துவோருக்கு விசேட அறிவிப்பொன்று விடுக்கப்பட்டுள்ளது.
அதற்கிணங்க 2023 – 2024 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான வரி அறிக்கைகளை சமர்ப்பிப்பதற்கான இறுதி நாள் இன்றுடன் (நவம்பர் 30) நிறைவடைவதாக உள்நாட்டு இறைவரித் திணைக்களம் அறிவித்துள்ளது.
அத்தோடு வருமான வரி அறிக்கைகள் இணையவழியூடாக மட்டுமே பெறப்படும் எனவும் அதற்கான தொழில்நுட்ப ஆதரவை வழங்குவதற்காக உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் தலைமை அலுவலகம், பிராந்திய மற்றும் நகர அலுவலகங்கள் இன்றும் வழமை போல் திறக்கப்படுமெனவும் உள்நாட்டு இறைவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.
கருத்து தெரிவிக்க