இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

புகையிரத சேவை பாதிப்பு

இன்று (அக்டோபர் 18) மின்னேரியா – ரொட்டவெவ சந்திக்கருகில் எரிபொருள் ஏற்றிச் சென்ற புகையிரதமொன்று காட்டு யானைக் கூட்டத்துடன் மோதியதில் தடம் புரண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது.

இதன் காரணமாக கொழும்பு கோட்டைக்கும் மட்டக்களப்பிற்குமிடையிலான அனைத்து புகையிரத சேவை பாதிப்புக்குள்ளாகியுள்ளதென புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேலும் இப்புகையிரத விபத்தில் இரு யானைகள் உயிரிழந்துள்ளதோடு மற்றொரு யானை காயமடைந்துள்ளதாகவும் வனஜீவராசிகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கருத்து தெரிவிக்க