இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்சிறப்பு செய்திகள்புதியவை

உணவுப்பொருட்களுக்கான வரி தொடர்பில் கருத்து

நிதியமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க இறக்குமதி செய்யப்படும் சில பொருட்களுக்கு விதிக்கப்படும் வரியை அதிகரிக்க நடவடிக்கை எடுத்துள்ளார்.

அதற்கிணங்க ஒரு கிலோகிராம் மைசூர் பருப்பு 25 சதவீதத்தாலும் மஞ்சள் பருப்பு 25 சதவீதத்தாலும் வரி விதிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு ஒரு கிலோ கிராம் மாசி மற்றும் அதற்குப் பதிலான பொருட்களுக்காக 302 ரூபா விசேட வர்த்தக பண்ட வரி விதிக்கப்பட்டுள்ளதோடு எலும்பு நீக்கப்பட்ட மீன் மற்றும் பிற மீனின் இறைச்சியைத் தவிர புதிய அல்லது உறைந்த மீன்கள் ஒரு கிலோவிற்கு 10% அல்லது 400 ரூபாய் என்ற உச்சபட்ச வரிக்கு உட்பட்டுள்ளதென அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் குறித்த வரி ஒக்டோபர் மாதம் 14ம் திகதி முதல் டிசம்பர் மாதம் 31ம் திகதி வரை அமுலாகுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க