இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்சிறப்பு செய்திகள்புதியவை

ஒத்திவைக்கப்பட்ட பாட்டலி சம்பிக்க ரணவக்கவின் வழக்கு

நேற்று (அக்டோபர் 11) கொழும்பு நீதிமன்றத்தில் 2016ம் ஆண்டு ராஜகிரிய பகுதியில் ஏற்பட்ட விபத்து தொடர்பான சாட்சியங்களை மறைத்தமை மற்றும் உருவாக்கியமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் தொடர்பில் முன்னாள் அமைச்சரான பாட்டலி சம்பிக்க ரணவக்க உள்ளிட்ட மூவருக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டிருந்தது.

அதனையடுத்து குறித்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொள்வதற்கு பிறிதொரு தினத்தை வழங்குமாறு சட்டதரணி அமரசிறி பண்டித்தரத்ன கோரிக்கை விடுத்ததற்கமைய குறித்த வழக்கானது எதிர்வரும் டிசம்பர் 18ம் திகதி மீள அழைப்பதற்கு கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கருத்து தெரிவிக்க