இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

நிலந்த ஜயவர்தன உச்சநீதிமன்றத்தில் முன்னிலையாகினார்

குற்றப்புலனாய்வு பிரிவின் தலைவர் நிலந்த ஜயவர்தன உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனுக்களுக்காக நிர்ணயிக்கப்பட்ட 75 மில்லியன் ரூபா நட்டயீட்டை முழுமையாக செலுத்தத் தவறியதன் காரணமாக, நீதிமன்ற உத்தரவிற்கமைய நிலந்த ஜயவர்தனவிற்கு எதிராக சட்டமா அதிபர் நீதிமன்ற அவமதிப்புக் குற்றச்சாட்டைத் தாக்கல் செய்திருந்தார்.

அதற்கிணங்க இன்று (அக்டோபர் 07) அது தொடர்பான உண்மைகளை முன்வைப்பதற்காக நிலந்த ஜயவர்தன உச்ச நீதிமன்றத்தில் முன்னிலையாகியுள்ளார்.

கருத்து தெரிவிக்க