இதழ்கள்உள்நாட்டு செய்திகள்

நடுநிசியில் பயங்கரம்! அம்பாந்தோட்டையில் ஒருவர் சுட்டுக்கொலை!!

லுனுகம்வெஹர , பெரலிஹேல பகுதியில் நேற்றிரவு இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் ஒருவர் பலியாகியுள்ளார். அத்துடன், படுகாயமடைந்த மேலும் இருவர் அம்பாந்தோட்டை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

திஸ்ஸமஹாராமவில் 4 ஆம் கிராமப் பிரிவை சேர்ந்த இளைஞர் ஒருவரே இவ்வாறு சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

மதுபான விருந்துபச்சாரத்தின்போது இரண்டு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலையடுத்தே துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது என்று பொலிஸார் தெரிவித்தனர்.

திட்டமிட்ட அடிப்படையிலேயே குழுவொன்றால் அச்சம்பவம் அரங்கேற்றப்பட்டிருக்கலாம் என பிரதேச வாசிகள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

துப்பாக்கிச்சூட்டை மேற்கொண்ட நபர்கள் இன்னும் கைது கைது செய்யப்படாத நிலையில், பொலிஸார் பல கோணங்களில் விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர்.

கருத்து தெரிவிக்க