இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்சிறப்பு செய்திகள்புதியவை

அரசின் வேலைத்திட்டத்திற்கு கொரியா ஆதரவு

நேற்று (செப்டம்பர் 27) ஜனாதிபதியின் செயலாளர் நந்திக சனத் குமாரநாயக்கவை கொரிய சர்வதேச ஒத்துழைப்பு முகவர் நிறுவனத்தின் உயர்மட்ட அதிகாரிகள் குழுவினர் ஜனாதிபதி அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடியிருந்தனர்.

இதன்போது தற்போதைய அரசாங்கத்தின் வெளிப்படைத் தன்மையுடன் கூடிய வேலைத்திட்டத்துக்கு முழு ஒத்துழைப்பு வழங்க கொரிய சர்வதேச ஒத்துழைப்பு முகவர் நிறுவனம் ஆதரவு தெரிவித்துள்ளது.

மேலும் இலங்கை அரசாங்கம் முன்னெடுக்கும் ஊழல், மோசடி ஒழிப்பு வேலைத்திட்டத்திற்கு நிதி உதவி வழங்கவும் இலங்கையின் தேவை அடிப்படையில் கடன்களை வழங்கவும் கொரிய சர்வதேச ஒத்துழைப்பு முகவர் நிறுவனம் இணக்கம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கருத்து தெரிவிக்க