உலகம்புதியவைவெளிநாட்டு செய்திகள்

சட்டவிரோத தங்கச் சுரங்கத்தில் நிலச்சரிவு

இந்தோனேசியாவின் மேற்கு சுமத்ரா மாகாணத்தில் பெய்து வரும் கனமழையால் பல பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டு வருகின்றது.

இந்நிலையில் நேற்று முன்தினம் (செப்டம்பர் 26) மேற்கு சுமத்ரா சோலோக் மாவட்டத்தில் சட்டவிரோதமாக தங்கச் சுரங்கத்தில் தங்கத்தாதுவை தோண்டும் செயலில் ஈடுபட்டு வந்தவர்கள் மீது அருகிலிருந்த மண்மேடு சரிந்து விழுந்துள்ளது.

இந்நிலச்சரிவில் 15 பேர் உயிரிழந்துள்ளதோடு 3 பேர் காயமடைந்துள்ளனரெனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கருத்து தெரிவிக்க