உள்நாட்டு செய்திகள்

மக்களே அவதானம்! மீண்டும் தலைதூக்குகிறது டெங்கு

நாட்டில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு அறிவித்துள்ளது.

இந்த நிலைமையை கருத்திற் கொண்டு டெங்கு  பரவுவதை தடுக்கும் நோக்கில் விஷேட வேலைத்திட்டம் கடந்த 8 ஆம் திகதி தொடக்கம் 10 ஆம் திகதி வரை நடைமுறைப்படுத்தப்பட்டது.

15 மாவட்டங்களில் 70 சுகாதார அதிகாரி பிரிவுகளை உள்ளடக்கிய வகையில் இது மேற்கொள்ளப்பட்டது.

ஜனாதிபதி செயலக பணியகம் மற்றும் தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு இதை மேற்கொண்டிருந்தது.

டெங்கு நுளம்புகள் பரவக்கூடிய பெரும்பாலான குடம்பிகள் யாழ்ப்பாணம், குருநாகல், கேகாலை ஆகிய மாவட்டங்களில் கண்டறியப்பட்டுள்ளன.

பாடசாலைகளிலும், மத வழிபாட்டு இடங்களிலும், தொழிற்சாலை மற்றும் கட்டிட நிர்மாண பகுதிகளிலும் டெங்கு குடம்பிகள் இருந்தமை கண்டறியப்பட்டுள்ளன.

தற்போதைய காலநிலையின் காரணமாக நுளம்புகள் பரவக்கூடிய நிலை காணப்படுகிறது.

இதனால் வாரத்தில் 30 நிமிடங்களில் டெங்கு நுளம்புகள் பரவக்கூடிய சுற்றாடல் பகுதிகளை சுத்தம் செய்வதில் பொது மக்கள் கவனம் செலுத்த வேண்டும் என  டெங்கு ஒழிப்பு பிரிவு கேட்டுக் கொண்டுள்ளது.

கடும் காய்ச்சல், தலை வலி, வாந்தி ,சருமத்தில் சிவப்பு நிறத்திலான தழும்புகள் காணப்படும் பட்சத்தில் உடனடியாக வைத்தியசாலைக்கு சென்று தேவையான சிகிச்சைகளை பெற்றுக் கொள்ள வேண்டும் என பொது மக்களிடம் டெங்கு ஒழிப்பு பிரிவு கேட்டுக் கொண்டுள்ளது.

கருத்து தெரிவிக்க