உள்நாட்டு செய்திகள்முக்கிய செய்திகள்

றிஷாட்டுக்கு எதிராக வியாழேந்திரன் களத்தில் – பின்வாங்கினார் மஹிந்த!

அமைச்சர் றிஷாட் பதியூதினுக்கு எதிராக கூட்டு எதிரணியால் முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணையில் எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ச கையொப்பமிடவில்லை.

எனினும்  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து, ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி பக்கம் தாவிய நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். வியாழேந்திரன்   பிரேரணையில் கையொப்பமிட்டுள்ளார்.

சுதந்திரக்கட்சி உறுப்பினர்கள் சிலர் பிரேரணையில் கையொப்பமிட்டிருந்தாலும், இது விடயம் குறித்து அக்கட்சியின் நிலைப்பாடு இன்னும் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படவில்லை.

நம்பிக்கையில்லா பிரேரணையை நிறைவேற்றுவதற்கு 113 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு அவசியமாகவுள்ள நிலையில் அதை திரட்டுவதற்கான முயற்சியில் கூட்டு எதிரணி தீவிரமாக இறங்கியுள்ளது.

கருத்து தெரிவிக்க