புதியவைவணிக செய்திகள்

இலங்கையின் வெளிநாட்டு கடன் குறித்து நிதி அமைச்சு கருத்து

இலங்கையின் வெளிநாட்டு கடன் குறித்து நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசியக் கொள்கைகள் அமைச்சு கருத்து தெரிவித்துள்ளது.

அதற்கிணங்க 2022 ஏப்ரல் மாதத்தில் தற்காலிகமாக கடன் செலுத்துவதை நிறுத்துவதாக அறிவித்த பின்னர், இலங்கை தனது அனைத்து வெளிநாட்டுக் கடனையும் திருப்பிச் செலுத்தாது என்று கூறுவது தவறானதென நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசியக் கொள்கைகள் அமைச்சு அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

மேலும் இலங்கையின் தற்போதைய பொருளாதார ஸ்திரத்தன்மைக்கு வெளிநாட்டுக் கடனுக்கான சேவையை வழங்காமையே முதன்மையான காரணம் என குறித்த அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

கருத்து தெரிவிக்க