இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்சிறப்பு செய்திகள்புதியவை

வாக்காளர் அட்டை விநியோகம் இன்றுடன் நிறைவு

எதிர்வரும் 21ம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலுக்கான உத்தியோகப்பூர்வ வாக்காளர் அட்டைகளை வீடுகளுக்கு விநியோகம் செய்யும் பணிகள் இன்றுடன் (செப்டம்பர் 14) நிறைவுபெறுகின்றதென தபால் திணைக்களம் அறிவித்துள்ளது.

அதற்கிணங்க இன்று உத்தியோகப்பூர்வ வாக்காளர் அட்டைகளை பெறாதவர்கள் தமது பகுதியிலுள்ள தபால் நிலையத்திற்குச் சென்று அடையாளத்தை உறுதிப்படுத்தி வாக்காளர் அட்டைகளை பெற்றுக்கொள்ள முடியுமென பிரதி தபால் மா அதிபர் ராஜித ரணசிங்க தெரிவித்துள்ளார்.

கருத்து தெரிவிக்க