இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ள இலங்கை போக்குவரத்து சபையின் வவுனியா சாலை ஊழியர்கள்

நேற்று (செப்டம்பர் 11) வவுனியா புதிய பேருந்து நிலையத்தில் கடமையில் இருந்த இலங்கை போக்குவரத்து பேருந்து நடத்துனர் மற்றும் ஊழியர்கள் மீது தனியார் போக்குவரத்து பேருந்து ஊழியர்கள் தாக்குதல் மேற்கொண்டமையால்
இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பேருந்தில் கடமையாற்றிய ஊழியர் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்யுமாறு தெரிவித்து போக்குவரத்துச் சபையின் வவுனியா சாலை ஊழியர்கள் இன்று (செப்டம்பர் 12 ) முதல் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

கருத்து தெரிவிக்க