இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்சிறப்பு செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ள அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்

முறைப்பாடு எதுவுமின்றி மருத்துவர் பாலித ராஜபக்ஷக்கு எதிராக முன்னெடுக்கப்படும் ஒழுக்காற்று விசாரணைக்கு எதிராக எதிர்வரும் புதன்கிழமை (செப்டம்பர் 18) நாடளாவிய ரீதியில் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடுவதற்கு அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தீர்மானித்துள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் மருத்துவர் சமில் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.

அதற்கிணங்க இன்று (செப்டம்பர் 11) முதல் நாடளாவிய ரீதியாகவுள்ள சகல வைத்தியசாலைகளிலும் கறுப்புக்கொடி பறக்கவிட தீர்மானித்துள்ளதாகவும் மருத்துவ சமில் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.

கருத்து தெரிவிக்க