இலங்கை

இலங்கையில் படிப்படியாக உயரும் தென்மேற்கு பருவபெயர்ச்சி மழை.

இலங்கையில் தென்மேற்கு பருவ பெயர்ச்சி மழை படிப்படியாக அதிகரித்து வருகிறது என வானிலை மையம் அறிவித்துள்ளது. இதனால், மேல், வடமேல், தென், கிழக்கு, ஊவா மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் பொலன்னறுவை மாவட்டத்திலும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் அவ்வப்போது காற்றின் வேகமும் மணிக்கு 40 கிலோ மீற்றர் வரை அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆகவே, இடி மின்னல் தாக்கங்களிலிருந்து ஏற்படக்கூடிய தாக்கங்களிலிருந்து மக்கள் தங்களை பாதுகாத்து கொள்ள தகுந்த நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறும் வானிலை ஆய்வு மையம் கோரியுள்ளது.

கருத்து தெரிவிக்க