உள்நாட்டு செய்திகள்முக்கிய செய்திகள்

வன்முறையாளர்களுக்கு எதிராக சர்வதேச சட்டத்தின்கீழ் குற்றச்சாட்டு- பிரதமர் உத்தரவு

கடந்த 12 மற்றும் 13ஆம் திகதிகளில் வடமேல் மாகாணத்தில் முஸ்லிம் மக்கள் மீது தாக்குதல் நடத்தியவர்களுக்கு எதிராக சர்வதேச குடியியல் மற்றும் அரசியல் உரிமைகள் சட்டம் மற்றும் அவசரக்கால சட்டத்தின்கீழ் குற்றச்சாட்டுக்களை முன்வைக்குமாறு பிரதமர், காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளார்.

இந்தநிலையில் கடந்த இரண்டு நாட்களாக இடம்பெற்ற வன்முறைகள் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

புத்தளம், வரக்காபொல, குருநாகல் குளியாப்பிட்டிய, நிக்கவரெட்டிய, சிலாபம் மினுவாங்கொட ஆகிய இடங்களிலேயே முஸ்லிம் மக்கள் மீது வன்முறைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

சம்பவங்கள் தொடர்பில் இதுவரை 60க்கும் மேற்பட்டவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
அவர்கள் மே 27வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்

கருத்து தெரிவிக்க