இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

மர்மான முறையில் வாகனங்கள் தீக்கிரை

பாதுக்க,மஹிங்கல பகுதியிலுள்ள வீடொன்றில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வேன்,கெப் மற்றும் முச்சக்கரவண்டி மர்மமான முறையில் தீயிட்டு எரிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதற்கிணங்க தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர ஹொரணை நகரசபை தீயணைப்பு பிரிவினர் முயன்றபோதும் துரதிஷ்டவசமாக அம்மூன்று வாகனங்களும் தீக்கிரையாகியுள்ளதாக பாதுக்க காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மேலும் இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பாதுக்க காவல்துறையினர் முன்னெடுத்து வருவதாக தெரிவித்துள்ளனர்.

கருத்து தெரிவிக்க