இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்சிறப்பு செய்திகள்புதியவை

கிளிநொச்சி மாவட்டத்தில் தென்னை பயிர்ச்செய்கை பாதிப்பு

கிளிநொச்சி மாவட்டத்தின் கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள பாரதிபுரம், கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள கண்டாவளை உள்ளிட்ட பல பகுதிகளில் தற்போது நிலவக்கூடிய கடும் வறட்சியால் தென்னை பயிர்ச்செய்கை பாதிக்கப்பட்டுள்ளதாக தென்னை பயிர்ச்செய்கையாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

மேலும் நாட்டில் ஏற்பட்டுள்ள வறட்சி காரணமாக தேங்காய்க்கு பெரும் கேள்வி நிலவிவதாகவும் அத்தோடு தென்னை செய்கை மேற்கொள்ளப்பட்டு  9 வருடம் கடந்த நிலையில் பயன்தரக் கூடிய நிலையிலிருந்த பலரது தென்னைகள் அழிவடைந்து வருவதாகவும் தென்னை பயிர்ச்செய்கையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

கருத்து தெரிவிக்க