இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

எல்பிட்டிய பிரதேச சபை தேர்தலுக்கான கட்டுப்பணத்தை சாகர காரியவசம் செலுத்தினார்

எல்பிட்டிய பிரதேச சபை தேர்தலுக்கான கட்டுப்பணம் செலுத்தும் நடவடிக்கைக்கான கால அவகாசமானது கடந்த மாதம் (ஓகஸ்ட்) 26ம் திகதி முதல் இம்மாதம் (செப்டம்பர் ) 11ம் திகதி வரை வழங்கப்பட்டுள்ளது.

அதற்கிணங்க காலி – எல்பிட்டிய பிரதேச சபை தேர்தலுக்கான கட்டுப்பணத்தை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பில் அதன் செயலாளரான சாகர காரியவசம் உள்ளிட்ட தரப்பினர் இன்று (செப்டம்பர் 06) காலி மாவட்ட செயலகத்தில் செலுத்தியுள்ளனரென தகவல்கள் வெளியாகியுள்ளன.

கருத்து தெரிவிக்க