இதழ்கள்உள்நாட்டு செய்திகள்

மங்களவுக்கு எதிராக பொலிஸ் தலைமையகத்தில் மஹிந்த அணி முறைப்பாடு

அமைச்சர் மங்கள சமரவீரவுக்கு எதிராக உடன் விசாரணையை ஆரம்பிக்குமாறு வலியுறுத்தி பொலிஸ் தலைமையகத்தில் இன்று முறைப்பாடு முன்வைக்கப்பட்டுள்ளது.

கூட்டு எதிரணியின் சார்பில், நாடாளுமன்ற உறுப்பினர் செஹான் சேமசிங்கவால் இந்த முறைப்பாடு தாக்கல் செய்யப்பட்டது.

இலங்கையானது சிங்கள பௌத்த நாடு அல்ல என்று அமைச்சர் மங்கள சமரவீர அண்மையில் கருத்து வெளியிட்டிருந்தார். இக்கருத்தானது தெற்கு அரசியலில் பெரும் சர்ச்சையைக் கிளப்பிவிட்டுள்ளது.

இந்நிலையிலேயே ” அமைச்சர் மங்களவின் இந்த கருத்து பாரதூரமானது. இன வன்முறைக்கு வழிவகுக்ககூடியது. எனவே, அவருக்கு எதிராக விசாரணை நடத்தி, உரிய தண்டனை வழங்குமாறு பொலிஸ் தலைமையகத்திடம் கோரப்பட்டுள்ளது.

 

கருத்து தெரிவிக்க