புதியவைவணிக செய்திகள்

திறைசேரி உண்டியல்கள் குறித்து இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பு

எதிர்வரும் செப்டம்பர் 04ம் திகதி 152,000 மில்லியன் ரூபாய் பெறுமதியான திறைசேரி உண்டியல்கள் ஏல விற்பனையினூடாக வழங்கப்படவுள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.

அதற்கிணங்க 91 நாட்கள் முதிர்வுக் காலத்தைக் கொண்ட 77 ஆயிரம் மில்லியன் ரூபாய் பெறுமதியான திறைசேரி உண்டியல்களும் 182 நாட்கள் முதிர்வுக் காலத்தைக் கொண்ட 162 ஆயிரம் மில்லியன் ரூபாய் பெறுமதியான திறைசேரி உண்டியல்களும் வழங்கப்படவுள்ளன.

அத்தோடு 364 நாட்கள் கொண்ட 20 ஆயிரம் மில்லியன் ரூபாய் பெறுமதியான திறைசேரி உண்டியல்கள் ஏல விற்பனையினூடாக வழங்கப்படவுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

கருத்து தெரிவிக்க