இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்சிறப்பு செய்திகள்புதியவை

நிக்கவரட்டிய பகுதியில் உரையாற்றிய சஜித் பிரேமதாச

நேற்று (ஓகஸ்ட் 30) நிக்கவரட்டிய பகுதியில்
இடம்பெற்ற பிரச்சார கூட்டத்தில் கலந்துகொண்ட ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளரும் எதிர்க்கட்சி தலைவருமான சஜித் பிரேமதாச கருத்து தெரிவித்தார்.

அதற்கிணங்க பெருந்தோட்ட மக்கள், கடற்றொழிலாளர்கள்,விவசாயிகள் என அனைவரையும் பாதுகாப்பதற்கு ஐக்கிய மக்கள் சக்தியின் அரசாங்கத்தால் நடவடிக்கை எடுக்கப்படுமென சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

மேலும் உயர்தரத்துடன் கூடிய ஒரு மூட்டை உரம் ஐந்தாயிரம் என்ற அடிப்படையில் விவசாயிகளுக்கு வழங்கப்படுமெனவும் விவசாயிகளின் விவசாய கடன் முழுமையாக இரத்து செய்யப்படுமெனவும் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு மாதாந்தம் 20 ஆயிரம் என்ற ரீதியில் 24 மாதங்களுக்கு கொடுப்பனவு வழங்கப்படுமெனவும் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

கருத்து தெரிவிக்க