உலகம்புதியவைவெளிநாட்டு செய்திகள்

மலேசியாவின் முன்னாள் பிரதமர் மீது வழக்கு பதிவு

மலேசியாவின் முன்னாள் மன்னர் சுல்தான் அப்துல்லா குறித்து அவதூறான வகையில் பேசியதாக மலேசியாவின் முன்னாள் பிரதமரான முஹ்யித்தீன் மீது குற்றம் சாட்டப்பட்டு தேச துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

அதற்கிணங்க இவ்வழக்கு மலேசியாவின் கெலாண்டன் மாகாண நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது குற்றம் சாட்டப்பட்ட முஹ்யித்தீன் தன் மீதான தேச துரோக குற்றச்சாட்டை திட்டவட்டமாக மறுத்துள்ளதோடு இவ்வழக்கு தொடர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டுமென கோரிக்கையும் விடுத்துள்ளார்.

மேலும் முஹ்யித்தீனுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளதோடு வழக்கு மீதான அடுத்தகட்ட விசாரணை எதிர்வரும் நவம்பர் 04ம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கருத்து தெரிவிக்க