இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்சிறப்பு செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

எல்பிட்டிய பிரதேச சபை தேர்தல் தொடர்பில் அறிவிப்பு

எல்பிட்டிய பிரதேச சபைக்கான வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்வது தொடர்பான அறிவிப்பை தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.

அதற்கிணங்க 2024ம் ஆண்டு நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்வது தொடர்பான அறிவிப்பை எல்பிட்டிய உள்ளூராட்சி சபையின் தேர்தல் அதிகாரி இன்று (ஓகஸ்ட் 26) அறிவித்திருந்தார்.

அதன்படி உள்ளூராட்சி தேர்தலுக்கான கட்டுப்பணத்தை செலுத்தும் நடவடிக்கையானது இன்று முதல் செப்டம்பர் 11ம் திகதி நண்பகல் 12 மணி வரை மேற்கொள்ளப்படுமெனவும் வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கை எதிர்வரும் செப்டம்பர் 9ம் திகதி முதல் செப்டம்பர் 12ம் வரை காலி மாவட்ட ஆளுநர் அலுவலகத்தில் நடைபெறுமெனவும் தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க அறிவித்துள்ளார்.

கருத்து தெரிவிக்க