இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்சிறப்பு செய்திகள்புதியவை

தலதா பெரெஹராவில் பங்கேற்ற ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க

நேற்று (ஓகஸ்ட் 19) கண்டி வரலாற்று சிறப்புமிக்க ஸ்ரீ தலதா மாளிகையின் எசல பெரஹராவின் இறுதி ரந்தோலி பெரஹராவில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பங்கேற்றிருந்தார்.

மேலும் ஜனாதிபதியுடன் பேராசிரியர் மைத்திரி விக்கிரமசிங்க,ஜனாதிபதியின் பணிமனையின் பிரதானி,தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் சாகல ரத்நாயக்க ஆகியோரும் கலந்துகொண்டனர்.

அத்தோடு அமைச்சர் பந்துல குணவர்தன, இராஜாங்க அமைச்சர்களான அனுராத ஜயரத்ன,திலும் அமுனுகம,லொஹான் ரத்வத்த, ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க உள்ளிட்டோரும் பெரஹராவை பார்வையிடுவதற்காக இணைந்துகொண்டனர்.

கருத்து தெரிவிக்க