புதியவைவணிக செய்திகள்

கொழும்பில் பாவனைக்குதவாத பருப்பு கைப்பற்றல்

நுகர்வோர் விவகார அதிகார சபைக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் கொழும்பு புறக்கோட்டை ஐந்து லாம்பு சந்தி தெருவில் அமைந்துள்ள பிரபல உணவு இறக்குமதி நிறுவனமொன்றுக்கு சொந்தமான களஞ்சியசாலையிலிருந்து மனித பாவனைக்குதவாத 1000 கிலோ கிராம் பருப்பு கைப்பற்றப்பட்டுள்ளது.

குறித்த கைப்பற்றப்பட்ட 1000 கிலோ கிராம் பருப்பும் பூஞ்சை அகற்றப்பட்டு மீண்டும் பதப்படுத்தப்பட்டு சந்தைக்கு அனுப்புவதற்காக பொதி செய்யப்பட்டுக் கொண்டிருந்தாக நுகர்வோர் விவகார அதிகார சபையினரால் தெரிவிக்கப்பட்டிருந்தது.

கருத்து தெரிவிக்க