உலகம்புதியவைவெளிநாட்டு செய்திகள்

பயங்கரவாத அச்சுறுத்தல் காரணமாக அமெரிக்க பிரபல பாடகியின் இசை நிகழ்ச்சி இரத்து

அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல பாடகியான டெய்லர் ஸ்விப்டினின் இசை நிகழ்ச்சி ஆஸ்திரியாவில் மூன்று நாட்கள் நடைபெறுமென அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் டெய்லர் ஸ்விப்டினின் இசை நிகழ்ச்சியில் தாக்குதல் நடத்த பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய இருவர் சதித்திட்டம் தீட்டியதை கண்டறிந்த பொலிஸார் குறித்த நபர்களை கைது செய்ததை தொடர்ந்து டெய்லர் ஸ்விப்டினின் இசை நிகழ்ச்சியில் பங்குபற்றுபவர்களின் பாதுகாப்பு கருதி குறித்த இசை நிகழ்ச்சி இரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அத்தோடு இரத்து செய்யப்பட்ட நிகழ்ச்சிகளுக்கான அனைத்து பற்றுசீட்டுக்களும் அடுத்த 10 நாட்களுக்குள் வழங்கப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க