உள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவை

காலி கோட்டை வீதியில் இடம்பெற்ற விபத்தில் பெண்ணொருவர் பலி!

நேற்று (19) காலி கோட்டை வீதியில் காலி நகரத்திற்கு அருகில் பயணித்த கார் ஒன்று சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி கடையொன்றிற்கு அருகில் இருந்த நான்கு பெண்கள் மீது மோதியதில் நான்கு பெண்கள் படுகாயமடைந்து கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் காயமடைந்த நால்வரில் ஒருவரான மத்துகம பகுதியில் வசிக்கும் 53 வயதுடைய பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும், விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை காலி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்து தெரிவிக்க