உள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவை

டெங்கு நோயாளர்கள் அதிகரிப்பு!

தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு, இலங்கையில் இவ்வருடத்தின் ஆரம்பம் முதல் தற்போது வரையான காலப்பகுதிக்குள் 30,663 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் 12 உயிரிழந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

மேலும், கொழும்பு மாவட்டத்திலிருந்து 7,119 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாகவும்,யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 4,004 நோயாளர்களும், கம்பஹா மாவட்டத்தில் 3,199 நோயாளர்களும், களுத்துறை மாவட்டத்தில் 1,690 நோயாளர்களும், கண்டி மாவட்டத்தில் 2,484 நோயாளர்களும், குருணாகல் மாவட்டத்தில் 1,321 நோயாளர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கருத்து தெரிவிக்க