இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

ஜனாதிபதி தேர்தல் குறித்து மைத்திரிபால சிறிசேன கருத்து

நேற்று (ஜூலை 16) கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதி தேர்தல் குறித்து கருத்து தெரிவித்தார்.

அதற்கிணங்க எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் வேட்பாளர் ஒருவர் போட்டியிடவுள்ளதாகவும் அதற்கான வேட்பாளர் தெரிவு செய்யப்பட்டுள்ளதாகவும் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

மேலும் ஜனாதிபதித் தேர்தல் கண்டிப்பாக நடத்தப்பட வேண்டுமெனவும் அதனை எந்த வகையிலும் ஒத்திவைக்க முடியாதெனவும் குறிப்பிட்டிருந்தார்.

கருத்து தெரிவிக்க