இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்சிறப்பு செய்திகள்புதியவை

போக்குவரத்து சேவை அத்தியாவசிய சேவையாக மாற்றம்

கடந்த சனிக்கிழமை (ஜூலை 13) முதல் அமுலுக்கு வரும் வகையில் ஜனாதிபதியின் பணிப்புரையின் பேரில் ஜனாதிபதியின் செயலாளர் திரு.சமன் ஏக்கநாயக்கவினால் வர்த்தமானி அறிவித்தலொன்று வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதற்கிணங்க பொது போக்குவரத்து சேவைகள் உள்ளிட்ட போக்குவரத்து சேவைகளை அத்தியாவசிய சேவையாக்கும் வர்த்தமானி அறிவித்தலை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மீண்டும் வெளியிட்டுள்ளார்.

மேலும் குறித்த வர்த்தமானியில்
வீதிகள், பாலங்கள் மற்றும் புகையிரத பாதைகள் உள்ளிட்டவை போக்குவரத்து சேவைகளை எளிதாக்குவதற்கும் பராமரிப்பதற்கும் அத்தியாவசியமாகுமென குறிப்பிடப்பட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க