உலகம்புதியவைவெளிநாட்டு செய்திகள்

டொனால்ட் டிரம்ப் மீது துப்பாக்கிச்சூடு

நேற்று (ஜூலை 14) பென்சில் வேனியா மாகாணம் பட்லர் நகரில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில் பங்கேற்ற குடியரசு கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரும் முன்னாள் ஜனாதிபதியுமான டொனால்ட் டிரம்ப் மீது திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது.இத்தாக்குதலில் டிரம்பின் காதில் இரத்தகாயம் ஏற்பட்டுள்ளதாகவும் மேலும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற நபரொருவர் உயிரிழந்ததுடன் பலர் காயங்களுக்குள்ளாகியுள்ளனர்.

இத்துப்பாக்கிச்சூட்டினை தாமஸ் மேத்யூ எனும் 20 வயதுடைய நபரே நடத்தியுள்ளாரென தெரியவந்துள்ளதோடு துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த டிரம்ப் சிகிச்சைக்கு பின் நலமாக உள்ளாரென தகவல்கள் வெளியாகியுள்ளன.

கருத்து தெரிவிக்க