இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

அதிக புகை வெளியிடும் வாகனங்கள் குறித்து விசேட நடவடிக்கை

மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் வாகன உமிழ்வு பரிசோதனை அறக்கட்டளை நிதியத்தினால் அதிக புகையை வெளியிடும் வாகனங்கள் குறித்து விசேட நடவடிக்கை எடுக்கும்படி தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கிணங்க அதிக புகையை வெளியிடும் வாகனங்களை கறுப்புப்பட்டியலில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதோடு இவ்வாறான வாகனங்கள் தொடர்பிலான முறைபாடுகளை 070 3500 525 எனும் வட்சப் இலக்கத்திற்கு தெரியப்படுத்தும்படி மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் வாகன உமிழ்வு பரிசோதனை அறக்கட்டளை நிதியத்தின் பணிப்பாளர் தசுன் கமகே அறிவித்துள்ளார்.

மேலும் வாகன அனுமதிப்பத்திரத்தை பெற்றுக்கொள்வதற்காக மாத்திரம் புகை சான்றிதழை பெற்றுக்கொள்ள வேண்டாமெனவும் கோரிக்கை ஒன்றினையும் தசுன் கமகே விடுத்துள்ளார்.

அத்தோடு வாகனங்களில் அதிக புகை வெளியேறுவதை அவதானிக்கும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட வாகனத்தின் உரிமையாளருக்கு எதிராக பராமரிப்பு உத்தரவு பிறப்பிக்கப்படும் எனவும் இல்லையெனில் வாகனத்திற்கு தடை உத்தரவு பிறப்பிக்கப்படும் எனவும் இதன் போது தசுன் கமகே தெரிவித்துள்ளார்.

கருத்து தெரிவிக்க