புதியவைவெளிநாட்டு செய்திகள்

அமெரிக்காவின் பார்பர்வில் அருவியில் இந்திய மாணவன் மூழ்கி பலி!

அமெரிக்காவின் நியூயோர்க் மாகாணத்தின் அல்பேனி பகுதியில் உள்ள பார்பர்வில் அருவியில் குளித்துக் கொண்டிருந்த 2 பேர் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டதில் ஒரு நபரை அங்கிருந்தவர்கள் பத்திரமாக மீட்டுள்ளதுடன் மற்றொரு நபர் நீரில் மூழ்கி உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளார்.

மேலும், உயிரிழந்த நபர் இந்தியாவின் தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்த சாய் சூர்யா அவினாஷ் காடே என்பதும் குறித்த மாணவன் அமெரிக்காவின் டிரினே பல்கலைக்கழகத்தில் படித்து வந்துள்ளதாகவும் நியூயோர்க்கில் உள்ள இந்திய தூதரகம் உறுதிப்படுத்தியுள்ளது.

கருத்து தெரிவிக்க