இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்சிறப்பு செய்திகள்புதியவை

இரா.சம்பந்தனின் பூதவுடல் நேற்று தகனம்

வயது மூப்பு, உடல்நலக்குறைவு காரணமாக கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த இரா.சம்பந்தன் கடந்த ஜூன் 30ம் திகதி தனது 91வது வயதில் சிகிச்சை பலனின்றி காலமானார்.

இதையடுத்து அவரது பூதவுடல் அஞ்சலிக்கான பல இடங்களுக்கு கொண்டு செல்லப்பட்டது.அதற்கிணங்க அவரது பூதவுடல் கொழும்பிலுள்ள தனியார் மலர்சாலையொன்றில் ஜூன் 30ம் திகதி வைக்கப்பட்டதோடு ஜூலை 03 பாராளுமன்றத்திலும் அதன்பின்னர் ஜூலை 04 யாழ்ப்பாணத்திலும் வைக்கப்பட்டிருந்துடன் திருகோணமலையிலுள்ள அவரது இல்லத்தில் நேற்று(ஜூலை 07)வரை அஞ்சலிக்கு வைக்கப்பட்டிருந்தது.

அதற்கிணங்க அன்னாரின் இறுதி கிரியைகள் நேற்று (ஜூலை 07)
இடம்பெற்றதோடு திருகோணமலையிலுள்ள இந்து மயானத்தில் அவரின் உடல் தகனம் செய்யப்பட்டது.

இரா.சம்பந்தனின் இறுதி கிரியைகளில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க,தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட பல அரசியல் தலைவர்கள் மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டிருந்தனர்.

கருத்து தெரிவிக்க