இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

கெஹெலிய ரம்புக்வெல மற்றும் அவரது குடும்பத்தினர்களின் நிலையான வைப்பு கணக்குகள் மற்றும் ஆயுள் காப்புறுதிகளை இடைநிறுத்த நீதிமன்றம் உத்தரவு

இன்று (ஜூலை 05) முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல மற்றும் அவரது குடும்பத்தினர்களின் நிலையான வைப்பு மற்றும் ஆயுள் காப்புறுதிகளை 3 மாதங்களுக்கு இடைநிறுத்துமாறு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மஞ்சுள திலகரத்ன உத்தரவிட்டுள்ளார்.

அதற்கிணங்க கெஹெலிய ரம்புக்வெல மற்றும் அவரது
குடும்பத்தினர்களின் நிலையான வைப்புக் கணக்குகள், ஆயுள் காப்புறுதிகளின் பெறுமதி 97 மில்லியன் ரூபாவிற்கும் அதிகமாகுமென குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் கெஹெலிய ரம்புக்வெல அவரது குடும்பத்தினர்களின் வங்கிக் கணக்குகள் ,காப்புறுதிகள்
கெஹெலிய ரம்புக்வெல,அவரது மனைவி, மூன்று மகள்கள் மற்றும் ஒரு மகளின் கணவர் ஆகியோரின் பெயரில் பராமரிக்கப்பட்டு வந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

கருத்து தெரிவிக்க